சென்னை: நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படு கிறது. இச்சட்டம் அமலுக்கு வந்தாலும், விலையில்லா அரிசி வழங்குவது தொடரும் என அரசு வெளியிட்ட செய் திக்குறிப்பு தெரிவிக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக் கும் உணவுப் பாதுகாப்பு வழங்க தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும், இச்சட்டத்தால் தமிழகத்திற்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்ற போதிலும், மக்கள் நலன் கருதி அது அமல் படுத்தப்படுகிறது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. முதல்வரின் உத்தரவின் படி இச்சட்டம் அமல்படுத்தப் படுவதாக செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.
தமிழகத்தில் அமலுக்கு வரும் உணவுப் பாதுகாப்பு சட்டம்
1 mins read

