வனவிலங்குப் பூங்காவில் புலியைப் படம்பிடிக்கும் மோடி

வனவிலங்குப் பூங்காவில் புலியைப் படம்பிடிக்கும் மோடி

1 mins read
fff7ccd1-7edd-4bc7-9dac-29c6b60172b8
-

பிரதமர் நரேந்திர மோடி நேற்று வடகிழக்கு மாநிலமான சட்டீஸ்கருக்குச் சென்று அங்குள்ள ராய்ப்பூரில் சுமார் 320 ஹெக்டேர் பரப்பளவில் மேம்படுத்தப்பட்ட நந்தன் வான் வனவிலங்கு உயிரியல் பூங்காவைத் திறந்துவைத்து, கூண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ள புலியை நுணுக்கமாகப் புகைப்படம் எடுத்தார். இதையடுத்து ராய்ப்பூர், நயா ராய்ப்பூர் இடையே பேருந்து போக்குவரத்தையும் துவக்கி வைத்ததுடன் புதிதாக நிறுவப்பட்டுள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாயா சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். சட்டீஸ்கர் மாநிலத்தின் 16வது ஆண்டு விழா நயா ராய்ப்பூரில் 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். படம்: ஊடகம்