புதுடெல்லி: கடந்த 17 ஆண்டு காலத்தில் இல்லாத அளவில் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பெரும் பிரச்சினையாக உருவெடுத்து உள்ளதால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பள்ளிகள் அனைத் தையும் மூடுவதற்கு டெல்லி மாநில அரசாங்கம் உத்தரவிட் டுள்ளது. இந்தச் சூழ்நிலையை 'நெருக் கடி கால நிலை' என்று மத்திய அரசு வர்ணித்துள்ள நிலையில், "இந்தப் பிரச்சினைகளை முழுமை யாகச் சரிசெய்வதற்கு அவசர கால நடவடிக்கைகள் தேவை," என்று மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அனைத்து கட்டுமானப் பணி களும் கட்டடங்களை இடிக்கும் நடவடிக்கைகளும் அடுத்த ஐந்து நாட்களுக்குத் தடை செய்யப்படும் என்றும் மேலும் அவர் கூறினார்.
நெருக்கடி நிலையில் டெல்லி
1 mins read

