மத்திய அரசின் அறிவிப்பு காரணமாக சென்னையில் நூறு ரூபாய் நோட்டுகளுக்கு கடும் கிராக்கி இருந்தது. கைவசம் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதிலேயே மக்கள் குறியாக இருந்தனர். சென்னையில் குறுகிய தூரப் பேருந்து பயணம் மேற்கொண்டவர்களும் அவ்விரு நோட்டுகளையும் நீட்டி யதால் மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நடத்துநர்கள் மீதச் சில்லறை வழங்கமுடியாமல் தவிக்க நேரிட்டது. இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதங்களும் மூண்டன. படம்: தகவல் ஊடகம்
சில்லறை பிரச்சினையால் வாக்குவாதங்கள்
1 mins read
-

