புதுடெல்லி: ஜப்பான் நாட்டிற்கு மூன்று நாள் அரசுமுறை பயணமாகப் பிரதமர் மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார். ஜப்பானில் நடைபெறும் இந்தியா-ஜப்பான் இடையிலான வருடாந்திர மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, ஜப்பான் மன்னர் அகிடோ, ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேவைச் சந்தித்து பொருளியல், ராணுவ ஒத்துழைப்பு, அறிவியல் ஆய்வு உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேச்சு நடத்த உள்ளார். இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தமும் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக வெளியுறவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பான் நாட்டிற்கு மோடி பயணம்
1 mins read

