புதுடெல்லி: இன்று நவம்பர் 11ஆம் தேதி நள்ளிரவு வரை தண்ணீர், மின் கட்டணங்கள் உள்ளிட்ட அர சுக்குச் சேரவேண்டிய தொகையை ரூ.500, ரூ.1000 பழைய நோட்டு கள் மூலம் செலுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. "மத்திய, மாநில அரசுகளுக்குச் செலுத்தவேண்டிய தொகை, வரிகள், அபராதம், கட்டணங்கள் ஆகியவற்றிற்குப் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பயன் படுத்தலாம். இன்று நள்ளிரவு வரை இந்த வசதியைப் பெறலாம்," என்று டுவிட்டரில் பொருளியல் விவகாரச் செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மக்கள் தங்க ளுக்குத் தேவையான அடிப்படை பொருட்களை வாங்கவும் சில்லரை தட்டுப்பாட்டை போக்கவும் இன்று முதல் அனைத்து ஏடிஎம்களிலும் ரூ.50 நோட்டுகள் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
'ரூ.500, 1,000 நோட்டுகள் வழி மின் கட்டணம் செலுத்தலாம்'
1 mins read

