சென்னை: பருவ மழை தீவிரம் அடையாததால் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் நிலவுவதாக நீர்வள நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மாநிலம் முழுவதும் 89க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய அணை கள் உள்ளன. மேலும் 14.9 லட்சம் கிணறுகள், 41 ஆயிரம் ஏரிகளும் உள்ள நிலையில், பருவ மழை கைகொடுக்காததால் இவற்றுள் பெரும்பாலானவற்றில் போதுமான தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. எனவே தண்ணீர் பிரச்சினையை எதிர்கொள்வது தொடர்பில் அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தெரிகிறது.
பருவ மழை பொய்த்ததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
1 mins read

