செல்லா நோட்டு அறிவிப்பால் தமிழகத்தில் மது விற்பனை சரிவு

செல்லா நோட்டு அறிவிப்பால் தமிழகத்தில் மது விற்பனை சரிவு

1 mins read
76704f75-1a23-4908-8d77-6af55dc379c2
-

பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற இந்திய அரசாங்கத்தின் அறிவிப்பு தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மது விற் பனையைப் பாதித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் உத்தரப் பிரதேசத்தில் மது விற் பனை கிட்டத்தட்ட 50% சரிவு கண்டதாகக் கூறப்படுகிறது. இத னால் இவ்வாண்டில் மது விற்பனை யின்மூலம் ரூ.19,250 கோடி வருவாய் ஈட்டவேண்டும் என்று அம்மாநில அரசு நிர்ணயித்த இலக்கை எட்ட முடியாமல் போக லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்திரைத் தாள் கட்டணம், விற்பனை வரிக்கு அடுத்ததாக மதுவின் மூலமே உத்தரப் பிரதேச அரசு அதிக வருமானம் ஈட்டி வருவதாகப் பெயர் கூற விரும்பாத மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.