இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 500, 1,000 ரூபாய் ஒழிப்புத் திட்டத்தை எதிர்த்து இன்று எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்த உள்ளன. காங்கிரஸ், திரிணாமுல் காங் கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், பகு ஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, தேசியவாத காங் கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, திமுக ஆகிய கட்சிகள் நரேந்திர மோடிக்கு எதிராக ஓரணியாகத் திரண்டு உள்ளன. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் இக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் மோடி விளக் கமளிக்க அந்தக் கட்சிகள் கோரி வருகின்றன. அவற்றின் கோரிக் கைக்கு இணங்க மோடி மறுத்து வருகிறார்.
மோடி: இது தொடக்கமே, இனிமேல்தான் தீவிர நடவடிக்கைகள்
1 mins read
-

