சென்னை: ரூ. 500, ரூ. 1,000 செல்லாது என்று அறிவிக்கப் பட்டதால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகளை மதிப் பிடுவதற்காக மத்திய குழு நேற்று தமிழகம் வந்து சேர்ந்தது. தொடக்கமாக, கோவை, திருச்சி மாவட்டங்களில் செல்லா நோட்டு நிலவரம் குறித்து அக்குழு நேற்று ஆய்வு செய்தது. செல்லா நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து விளைவுகளைக் குறித்து கள ஆய்வு செய்வதற் காக நவம்பர் 19ஆம் தேதி பிரதமர் மோடி 27 குழுக்களை அமைத் திருந்தார். இதில், மூவர் கொண்ட குழு தமிழகம் வந்துள்ளது. இந்தக் குழுவில் மத்திய பணியாளர் நலன், பயிற்சித் துறை கூடுதல் செயலர், மனிதவள மேம் பாட்டுத் துறை இணைச் செயலர், மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை யின் துணைச் செயலர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
செல்லா நோட்டு; குழு ஆய்வு
1 mins read

