50% வரி, 4 ஆண்டு முடக்கம்: சட்டத்தைத் திருத்துகிறது இந்திய அரசு

50% வரி, 4 ஆண்டு முடக்கம்: சட்டத்தைத் திருத்துகிறது இந்திய அரசு

1 mins read

கறுப்புப்பண ஒழிப்பில் அடுத்த அதிரடியாக இந்திய நாடாளு மன்றத்தில் வருமான வரிச் சட் டத்தில் திருத்தம் கொண்டுவரப் பட உள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இம்மாதம் 8ஆம் தேதி பிரதமர் மோடி அறி வித்த பின்னர் வங்கிக் கணக்கு களில் இரண்டரை லட்ச ரூபாய்க்கு மேல் பணம் செலுத் தியவர்களைப் பாதிக்கும் வித மாக அந்தச் சட்டத்திருத்தம் இருக்கும் என்று மத்திய அரசின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வங்கிக் கணக்குகளில் டிசம் பர் 30ஆம் தேதி வரை பழைய நோட்டுகளைச் செலுத்தலாம்.

அவ்வாறு செலுத்தும்போது 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத் தியவர்கள் அப்பணம் வந்ததற்கான வழிகளை வருமான வரித்துறை யிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு நாடு முழு வதும் உள்ள ஏராளமான வங்கிக் கணக்குகளில் பெரும் தொகை யிலான ரொக்கப் பணம் செலுத் தப்பட்டது அரசாங்கத்தின் கவ னத்திற்கு வந்தது. ஜன் தன் வங்கிக் கணக்குகளில் இரண்டு வார காலத்தில் மட்டும் 21,000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள் ளது அதிகாரிகளை அதிர்ச்சி அடையச் செய்தது.