முசாபர்நகர்: புது ரூபாய் நோட்டை வரதட்சணையாக தர முடியாததால் ஒரு பெண்ணின் திருமணமே நின்று போன சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் நகரில் ஒரு ஜோடிக்குத் திருமணம் நடைபெற இருந்துள்ளது. திருமணத் திற்கு வரதட்சணையாக காரும் புது ரூபாய் நோட்டுகளும் மணமகன் சார்பில் பெண் வீட்டாரிம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் திருமணத்திற்கு முந்தைய நாள் வரை மணமகன் கேட்ட வரதட்சணையை மணமகள் வீட்டார் கொடுக்க வில்லை. இதனால் கோபம் கொண்ட மணமகன் திருமணத்தை நிறுத்திவிட்டார்.
புது ரூபாயை வரதட்சணையாக தராததால் நின்றுபோன திருமணம்
1 mins read

