காய்கறி விற்பனையில் நீடிக்கும் சரிவு

காய்கறி விற்பனையில் நீடிக்கும் சரிவு

1 mins read
18587944-7879-4b51-90ad-7e2c7a66e6f6
-
Google News Preferred Icon

சென்னையில் சில்லறை ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருவதால் காய்கறிகள் விற்பனை குறைந்துள்ளது. இதனால் சில்லறை காய்கறி வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோயம்பேடு சந்தையில் தினமும் ரூ.5 கோடி அளவில் காய்கறிகள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை சுமார் 2,000க்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகள் வாங்கிச் செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படம்: தகவல் ஊடகம்