விழுப்புரம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஐந்து பேர் உடல் நசுங்கிப் பலியாகினர். நேற்று முன்தினம் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து ஒன்று, கள்ளக்குறிச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்புக் கட்டைகள் மீதேறி எதிரே வந்த மற்றொரு அரசுப் பேருந்து மீது மோதியது. இதில், இரு பேருந்துகளில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர். இதைக் கண்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அவர்களை மீட்டனர். எனினும் படுகாயமடைந்த ஐவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இரு பேருந்துகள் மோதல்: ஐவர் பலி
1 mins read

