புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ.500, ரூ.2000 நோட்டுகளை விநியோகிப்பதற்காக 1.80 லட்சம் ஏடிஎம் இயந்திரங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இது மொத்தமுள்ள 2 லட்சம் ஏடிஎம் இயந்திரங்களில் சுமார் 90 விழுக்காடாகும். கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மத்திய அரசு கடந்த மாதம் தடை செய்தது. புதிய ரூ.500, 2000 நோட்டுகளை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, புதிய நோட்டுகளை விநியோகிக்க ஏதுவாக நாடு முழுவதும் உள்ள 2 லட்சம் ஏடிஎம் இயந்திரங்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
புதிய ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க ஏடிஎம் சீரமைப்பு
1 mins read

