கர்நாடக- கேரள எல்லையில் விசித்திர விலங்கு

கர்நாடக- கேரள எல்லையில் விசித்திர விலங்கு

1 mins read
ddbfc45b-bd10-42b3-95dd-6e8165e93956
-

பெங்களூரு: கர்நாடக- கேரள எல்லைப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை விசித்திரமான விலங்கு ஒன்று பிடிபட்டுள்ளது. இதன் கைகளில் பயங்கர கூர்மையான நகங்கள் உள்ளன. இந்த விலங்கு கூண்டுக்குள் அடைக்கப்பட்ட நிலையில் உள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது ஒரு கொடூரமான விலங்கு என்றும் விலங்குகளையும் மனிதர்களையும் உண்ணும் ஏலியன் வகை விலங்காக இருக்கலாம் என்றும் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளனர். "இதனால் கர்நாடகாவின் எல்லைப் பகுதி வழியே செல்பவர்கள் கவனமாகச் செல்லுங் கள்," என்றும் அதில் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ஆனால் இது குறித்து அரசுத் துறைகள் சார்பான அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.