சென்னை: நேற்று முன்தினம் காலமான அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத் தியபோது தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கதறி அழுதார். அதைக் கண்டு அதிமுக நிர்வாகிகளும் கண்ணீர் விட்டனர். நேற்று காலை ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் பன்னீர்செல்வம். அப்போது உணர்ச்சி மிகுதியால், துக்கம் தாளாமல் அவர் கதறி அழுதார். அவரைத் தொடர்ந்து, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
கதறி அழுதபடி அஞ்சலி செலுத்திய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
1 mins read
-

