கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் கேப் பிட்டல் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந் தனர்; 34 பேர் காயம் அடைந்தனர். செவ்வாயன்று இரவு 9 மணி அளவில் அஸ்ஸாம்-மேற்கு வங்காள எல்லையில் இந்த கேப்பிட்டல் விரைவு ரயிலின் இரு பெட்டிகள் தடம்புரண்டன. விபத்தில் சிக்கிய கேப்பிட்டல் விரைவு ரயில் பீகார் மாநிலம், பாட்னாவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கௌஹாத்திக்குச் சென்று கொண்டி ருந்தது. பீகாரில் ராஜேந்திர நகரில் இருந்து புறப்பட்ட அந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தின் சாமுக்தலா ரயில் நிலை யத்தை கடந்து சென்ற சிறிது நேரத்தில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் தடம் புரண்டதில் இருவர் பலி; 34 பேர் காயம்
1 mins read
-

