திருவனந்தபுரம்: முதல்வர் ஜெய லலிதா மறைவை ஒட்டி கேரளாவில் ஒருநாள் அரசு விடுமுறை அறிவிக் கப்பட்டது. நேற்று முன்தினம் அந்த மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி கள், நீதிமன்றங்கள் செயல்பட வில்லை. பள்ளி, கல்லூரிகளின் தேர்வுகளும் தள்ளி வைக்கப் பட்டன. முதல்வர் ஜெயலலிதா வுக்காக கேரள அரசு சார்பில் 3 நாட்கள் துக்கமும் அனுசரிக்கப் படுகிறது. கேரள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றபோது முதல்வர் ஜெய லலிதாவுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கேரளாவில் அரசு விடுமுறை: 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
1 mins read

