தமிழகத்தின் முன்னாள் முதல் வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அதிகாரபூர்வ அறி விப்பு செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே ஓ. பன்னீர்செல்வத்தை அடுத்த முதல்வ ராக அவசர அவசரமாகப் பதவி ஏற்க வைத்த முறை அதிமுக வட்டாரத்திலிருந்து அதிருப்தி குரல்களை ஏழச் செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த அவசர நடவடிக்கை அநாகரிகமானது என்று சிலர் கூறுகின்றனர். இது சசிகலா நடத்தும் கண்துடைப்பு வேலை என்றும் அவர்கள் வர்ணிக் கின்றனர். பன்னீர்செல்வத்தைத் தற்காலிகமாக முதல்வர் பதவியில் நியமித்துக் கூடிய விரைவில் முழு அதிகாரத்தைக் கைப்பற்ற ஜெயலலிதாவின் நீண்டகாலத் தோழி சசிகலா (படம்) காய்களை நகர்த்தி வருவதாக அதிமுக வின் மூத்த தலைவர்கள் சிலர் கூறி வருவதாக ஊடகங்கள் கூறுகின்றன.
அதிகாரத்தைக் கைப்பற்ற காய் நகர்த்தும் சசிகலா
1 mins read
-

