சென்னை: அதிமுகவை வழி நடத்த சசிகலா நடராஜன் முன் வர வேண்டுமென சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் கேட்டுக் கொண்டுள்ளார். போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியை அவருடன் 33 ஆண்டுகளாக அன்புச் சகோதரியாக இருந்த சசிகலா வழி நடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளதாகத் தெரிவித்தார். "அதிமுக தோழர்களும், தோழமைக் கட்சியினரும் ஜெயலலிதா எந்த இலக்கை நோக்கி கடந்த தேர்தலில் பயணித்தாரோ அதை முழுமையாக அடைய சசிகலா எடுக்கும் முடிவுகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதற்கான நம்பிக்கையை சின்ன அம்மா சசிகலாவுக்கு அனைவரும் தர வேண்டும். ஜெயலலிதா மறையவில்லை. நம்மோடுதான் உள்ளார்," என்றார் சரத்குமார்.
அதிமுகவை வழிநடத்த சசிகலாவுக்கு சரத் ஆதரவு
1 mins read
-

