ஜார்க்கண்ட்டில் முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுச் சிறை

ஜார்க்கண்ட்டில் முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுச் சிறை

1 mins read

ஜார்க்கண்ட்: அரி நாராயண ராய் என்பவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2005 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான அமைச் சரவையில் அமைச்சராகப் பணியாற்றினார். அக்காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிக மாக சொத்துக் குவித்ததாக அவர் மீது புகார் எழுந்தது. அது தொடர்பாக அவர் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் சிபிஐ வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. அரி நாராயண் ராய், அவரது மனைவி சுசிலா தேவி, சகோதரன் சஞ்சய் ராய் ஆகியோருக் குத் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.