திருவனந்தபுரம்: கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி வழக்கில் தொழிலதிபர் சரிதா நாயருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்து பெரும்பாவூர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணனுக்கும் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கேரளாவில் 2013ம் ஆண்டு வீடுகள், நிறுவனங்களுக்குச் சோலார் பேனல் அமைத்துத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த மோசடியில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
சோலார் பேனல் மோசடி வழக்கு: சரிதா நாயருக்கு மூன்றாண்டு சிறை
1 mins read
-

