அத்தை ஜெயலலிதா மரணத்தில் மர்மமில்லை - தீபக்

அத்தை ஜெயலலிதா மரணத்தில் மர்மமில்லை - தீபக்

1 mins read

சென்னை: தமது அத்தையின் மரணத்தில் எந்தவித மர்மமும் இல்லை என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் திட்டவட்டமாகக் கூறி உள்ளார். தனியார் தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்த அண் மைய பேட்டியில், சசிகலாவால் அதிமுகவை வழிநடத்த முடியும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ள தாக அவர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அவ ரது அண்ணன் மகளும் தீபக்கின் சகோதரியுமான தீபாவும் அண் மைய பேட்டி ஒன்றில், சசிகலா தரப்பினரைக் கடுமையாக விமர் சித்ததுடன், பல்வேறு குற்றச்சாட்டு களையும் சுமத்தினார்.

இந்நிலையில் சசிகலா தரப் புக்கு ஆதரவாக தீபக் பேசியுள்ளார். தனது அத்தையைச் சந்திக்க எந்தவிதத் தடைகளும் ஏற்பட வில்லை என்றும் 6 மாதங்களுக்கு முன்பு வெளிநாடு செல்லும் முன் னர் ஜெயலலிதாவை நேரில் சந்தித் ததாகவும் அவர் கூறியுள்ளார்.