ராமர் கோயிலுக்கு வெள்ளிக் கிரீடம் காணிக்கை அளித்த பிச்சைக்காரர்!

விஜயவாடா: ராமர் கோயிலுக்கு ரூ.1.50 லட்சத்தில் வெள்ளிக் கிரீடத்தைக் காணிக்கையாக அளித்துள்ளார் பிச்சைக்கார பக்தர் ஒருவர். அந்தக் கிரீடத்தின் மதிப்பு ரூ.1.5 லட்சம். தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த யாடி ரெட்டி (75), என்பவர்தான் அந்தக் கிரீடத்தைக் கொடுத்த பிச்சைக்காரப் பக்தர். இவர் இளம் வயதில் பல வேலைகள் செய்து, இருசக்கர ரிக்ஷா இழுத்துப் பிழைப்பு நடத்தி வந்துள்ளார். முதுமை காரணமாக வேலைக்குச் செல்ல முடியாமல் கடந்த சில ஆண்டுகளாக விஜயவாடா நகரில் உள்ள ராமர் கோயில் முன்பு பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்தி வருகிறார். அவரின் தேவையைக் காட்டிலும் மிஞ்சிய பணத்தைப் பக்திப் பணிகளுக்குச் செலவு செய்யத் திட்டமிட்டு சேமித்துதான் இந்தக் காணிக்கையை செலுத்தியுள்ளதாகக் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!