பெங்களூரு: பெங்களூருவில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணியாற்றும் இளைஞர் ஒருவர் நாள்தோறும் இரவில் மட்டும் பெண்களைப் போல சேலை கட்டிக்கொள்வ தால் அவரது மனைவி அவரை விட்டு ஓடியே போய்விட்டார். பெங்களூருவில் உள்ள கோர மங்களா பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (பெயர் மாற்றப்பட்டுள் ளது). 29 வயதான இவர், அங்குள்ள மென்பொருள் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகிறார். கடந்த ஆண்டு அவர், ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை மணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் அனிதா பெங்களூருவில் உள்ள இந்திரா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "எனது கணவர் திருமணமான முதல் நாள் இரவே பெண்களைப் போல சேலை அணிந்து கொண்டு உறங்கினார். "மறுநாள் பகலில் மற்ற ஆண்களைப்போல பேண்ட், சட்டை அணிந்துகொண்டு அலுவலகம் சென்றார். "பகலில் ஆண்களின் உடையும் இரவில் சேலையும் அணிவ தையே அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் எனக்கும் அவருக்கும் பலமுறை வாக்குவாதம் நடந்துள்ளது. "எனது கணவர் ஓரினச் சேர்க்கையில் நாட்டம் கொண்டுள்ளதாக என்னிடமே தெரிவித்தார்.
எனவே அவரிடம் இருந்து என்னைப் பிரித்து விடுங்கள்," என்று கூறி யிருந்தார். இதையடுத்துப் போலிசார் அங்குள்ள மகளிர் உதவி மையத்திற்கு இருவ ரையும் அனுப்பி மனநல ஆலோசனை வழங்கினர். அப்போது ராஜேஷ், தான் பெண்ணாக மாற விரும்புவ தாகவும் தனது மனைவி தன்னைவிட்டுப் பிரிந்துசெல்ல அனுமதிப்ப தாகவும் கூறினார். இதையடுத்து இருவரும் முழு மனதுடன் பிரிந்துசெல்ல காவல்துறையினர் அனுமதித்த தாக அந்த மகளிர் உதவி மையம் தெரிவித்துள்ளது.