திருச்சி: அதிமுகவில் இருந்து அழைப்பு வந்தால் சசிகலாவை சந்திக்கத் தயார் என லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார். இனி வரும் காலங்களில் அரசியல் களத்தில் லட்சிய திமுக தீவிரமாகச் செயல்படும் என்றும் கச்சேரி நடத்தியாவது கட்சியை வளர்க்க முடிவு செய்துள்ளதாகவும் திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். "காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த திமுகவுடன் ஒருநாளும் சேர மாட்டேன். இலங்கைத் தமிழர் பிரச்னை, காவிரி பிரச்சினை ஆகியவற்றில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தன," என்றார் ராஜேந்தர்.
அழைப்பு வந்தால் சசிகலாவை சந்திப்பேன்: டி.ராஜேந்தர் முடிவு
1 mins read

