கோயம்புத்தூர்: கோயம்புத்தூரைச் சேர்ந்த 36 வயது மாது ஒருவர் எச்1என்1 வைரஸ் கிருமி காரணமாக மரணம் அடைந்துவிட்டார்.
அவருக்கு காய்ச்சலும் தொண்டையில் வலியும் இருந்தது. அதனையடுத்து ஸ்ரீஜா கார்த்திக் என்ற அந்த மாது கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.