சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா இன்று பதவி ஏற்கிறார். மறைந்த முதல் வர்களும் அக்கட்சி ஆணிவேரு மாக இருந்தவர்களுமான எம்ஜிஆர், ஜெயலலிதா நினை விடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டுப் புதிய பொறுப்பை ஏற்க நேற்றே சசிகலா தயாரானார்.
சென்னை, அப்பல்லோ மருத் துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அதிமுக தலைவி ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்ததையடுத்து சென் னையை அடுத்த வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா பெயரை முன்மொழிந்து ஏகமனதாகத் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான தலை வர்கள் போயஸ் இல்லத்திற்குச் சென்று சசிகலாவிடம் அளித்து அவரது ஒப்புதலைக் கேட்டனர். சிறிது நேர தாமதத்திற்குப் பிறகு, புதிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்க சசிகலாவும் சம்மதம் தெரிவித்தார்.