தூத்துக்குடி அருகே கூடிய வெளிநாட்டினர், தமிழ் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து, மண் பானையில் பொங்கல் வைத்து, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். சாயர்புரம் பகுதியில் உள்ள தனியார் பண்ணைத் தோட்டத்தில், நேற்று முன்தினம் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 47 வெளிநாட்டினர் 20 குழுக்களாகப் பிரிந்து பொங்கல் பானை, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றைக் கொண்டு, தாங்களே அடுப்பு மூட்டி தனித்தனியாக பொங்கல் வைத்தனர். சுற்று வட்டார மக்கள் இதைக் கண்டு ரசித்தனர். படம்: தகவல் ஊடகம்
பொங்கல் வைத்து மகிழ்ந்த வெளிநாட்டினர்
1 mins read
-

