சென்னை: முதல்வர் பன்னீர்செல்வமும் தமிழக அமைச்சர்களும் தினந்தோறும் போயஸ் தோட்டத் திற்கு வந்து தம்மைச் சந்தித்துச் செல்ல வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் சசிகலா உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்பு முதல்வர் ஜெயலலிதாவும் தனது அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவருக்கும் இத்தகைய உத்தரவைப் பிறப்பித்து இருந்தார். எனினும், சசிகலா அதே வழியைப் பின்பற்ற மாட்டார் என அமைச்சர்கள் கருதினர்.
ஆனால் அவரும் இதே போன்ற உத்தரவை பிறப்பித்துள்ளதை அடுத்து, பழைய நிலையே இப்போதும் நீடிக்கிறது. அமைச்சர்கள் அனைவரும் போயஸ் தோட்டம் வந்தாலும், முக்கிய அலுவல்கள் இல்லாத நாட் களில் மட்டுமே முதல்வர் பன்னீர்செல்வம் வருவதாகக் கூறப்படுகிறது. அவருக்கு மட்டும் சசிகலா தரப்பு சில சலுகை களை அளித்திருப்பதாக தமிழக ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.