சென்னை: அதிமுக பொதுச்செயலராகப் பொறுப்பேற்றுள்ள சசிகலாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய குடியரசுக் கட்சியின் தேசிய தலைவர் ராம்தாஸ் அத்வாலே நேற்று முன்தினம் அவரை நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் தென்னிந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் செர்ஜே எல்.கோடவ், சென்னை ரஷ்ய தூதரக அதிகாரி எவ்கேனி கிராவ் சென்கோ, ரஷ்ய தூதரக கலாசார பிரிவின் தகவல் ஆலோசகரும் இந்திய ரஷ்ய வர்த்தக சபையின் பொதுச்செயலாளருமான தங்கப்பன், மாசிடோனியாவுக்கான இந்திய தூதரக அதிகாரி அரவிந்த் குப்தா, செனகலுக்கான இந்திய தூதரக அதிகாரி அசோக் தக்கர் ஆகியோர் தனித்தனியே சசிகலாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாக அதிமுக தலைமைக்கழக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த வெளிநாட்டுத் தூதர்கள்
8 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Jan 2017 08:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!