ரூ.4,807 கோடி கறுப்புப்பணம் பறிமுதல்

புதுடெல்லி: ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இதுவரை 4,807 கோடி ரூபாய் கறுப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கறுப்புப் பணத்தில் 112 கோடி ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகளாகப் பிடிபட்டுள்ளதாக டெல்லியில் வருமான வரி உயரதிகாரிகள் சிலர் கூறினர். பிடிபட்ட புதிய ரூபாய் நோட்டுகளில் பெரும்பாலானவை 2,000 ரூபாய் நோட்டுகள் என்றும் கறுப்புப் பணம் தொடர்பாக இதுவரை 5,184 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ள தாகவும் கூறப்பட்டுள்ளது. தங்க நகைகளாக 97 கோடியே 80 லட்ச ரூபாய்க்குக் கணக்கில் வராத தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!