இந்தியாவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்திய தேசியக் கொடி பதிக்கப்பட்ட மிதியடிகளை விற்பனையில் இருந்து நீக்கி யுள்ளது அமேசோன் இணைய விற்பனைத் தளம். மிதியடிகளைத் திரும்பப் பெறா விட்டால் அமேசோன் ஊழியர் களுக்கு இந்திய விசா வழங்கப் படாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அமேசோன் விற்பனையை நிறுத்தியது.
உலக அளவில் இணைய விற்பனை நிறுவனங்களில் முன்னிலை வகித்து வரும் அமேசோன் இந்திய தேசியக் கொடி பொறித்த மிதியடி களை விற்பனை செய்து வருவ தாகப் புகார் எழுந்தது. இது தொடர்பான புகைப்படங்களைப் பொதுமக்கள் இந்திய வெளியுற வுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவ ராஜுக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து இந்தியா அமேசோ னுக்கு எச்சரிக்கை விடுத்தது. இதுகுறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த சுஷ்மா, "அமேசோன் நிறுவனம் நிபந்தனை யற்ற மன்னிப்பைக் கேட்க வேண்டும்."இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் அனைத்துப் பொருட்களையும் திரும்பப் பெற வேண்டும். இனிமேல் அதுபோன்ற பொருள்களை அந்த நிறுவனம் விற்பனை செய்யக்கூடாது.