மெரினாவில் மனிதச்சங்கிலி போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை அகற்றக் கோரியும் விவசாயிகளின் நலன்களைக் காக்க வலியுறுத்தியும் நேற்று சென்னை மெரீனா கடற்கரையில் இளையர்கள் நேற்று மனிதச்சங்கிலி அமைக்கும் போராட்டத்தை நடத்தினர். இதற்காக சமூக வலைத்தளங்கள் மூலம் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, நூற்றுக்கணக் கானோர் கடற்கரையில் திரண்டு போராட்டத்தில் பங்கேற்றனர். மெரீனா கடற்கரையின் கலங்கரைவிளக்கத்தில் இருந்து ஏறத்தாழ 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு இளைஞர்கள் மனிதச்சங்கிலி அமைத்தனர். இதையடுத்து பொதுமக்களும் இதில் இணைந்து கொண்டனர். கடந்த சில நாட்களாகவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் இளையர்கள் ஒருங்கிணைந்து போராட்டங்களை நடத்தத் துவங்கியுள்ளனர். படம்: தகவல் சாதனம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!