புதுடெல்லி: சுனில் ரஸ்டோகி என்ற 38 வயது துணி தைக்கும் ஆடவர் ஒருவர் கிட்டத்தட்ட 600 பள்ளி மாணவிகளிடம் இனிக்கப் பேசி அவர்களை ஏமாற்றி, மானபங்கப்படுத்தியதன் காரணமாக சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார். "கிழக்கு டெல்லியின் அசோக் நகர் பகுதியில் வசிக்கும் மாணவிகள் அதிக அளவில் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர். சிறுமிகளின் பெற்றோர் சில பொருட்களைத் தங்கள் மகள்களிடம் கொடுத்தனுப்பச் சொல்லியதாகக் கூறி அவர்களைத் தனிமையான இடங்களுக்கு அழைத்துச் சென்று சுனில் ரஸ்டோகி மானபங்கப் படுத்தி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது," என்று போலிஸ் அதிகாரி ஓம்வீர் சிங் நேற்று தெரிவித்தார்.
சிறுமிகள் சுனில் ரஸ்டோகியிடம் தங்களை விட்டுவிடும்படி உதவி கேட்டு கெஞ்சி அழுததாக வும் கூறப்படுகிறது. எப்பொழுது எல்லாம் பதின்ம வயது சிறுமிகள் பள்ளியில் இருந்து வீட்டுக்குத் திரும்பிச் செல்கிறார்களோ அப்போது எல் லாம் ரஸ்டோகி சிறுமிகளைத் தவறான முறையில் அணுகி மானபங்கப்படுத்தி உள்ளார்.