‘151 உயிர்களை பலிவாங்கிய ரயில் விபத்துகள் பாகிஸ்தான் உளவுப்படையின் நாசவேலை’

கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த இரு பெரும் ரயில் விபத்துகளுக்கு பாகிஸ்தா னின் உளவுப் படையான ஐஎஸ்ஐ காரணம் என்று போலிசார் சந்தே கிக்கின்றனர். கான்பூர் அருகே நடந்த அந்த விபத்துகளில் 151 உயிர்கள் பறிபோனதோடு கிட்டத்தட்ட 200 பேர் வரை காயமடைந்தனர். அச்சம்பவங்கள் தொடர்பில் இந்திய=நேப்பாள எல்லையில் உள்ள மோதிஹரி என்னும் இடத்தில் மூவர் பிடிபட்டனர். உமாசங்கர் பட்டேல், மோதிலால் பாஸ்வான், முகேஷ் யாதவ் என்னும் அம்மூ வரும் துபாயை இருப்பிடமாகக் கொண்ட நேப்பாள குடிமகனின் உத்தரவுக்கு இணங்க ரயில்களைக் கவிழ்த்து நாசவேலையில் ஈடுபட்டனராம். அந்த நேப்பாள குடிமகன் பாகிஸ்தான் உளவாளி என்பதும் இப்போது தெரிய வந்துள்ளதாக போலிஸ் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி கோராசாஹான் என்னுமிடத்தில் உள்ள ரயில் தண்ட வாளத்தில் குக்கர் வெடிகுண்டு வைக்கப்பட்டதன் தொடர்பில் இந்த மூன்று குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டதாக கான்பூர் மாவட்ட போலிஸ் துணை தலைமை அதிகாரி ஜிதேந்தர் ராவ் கூறினார். இவர்களில் ஒருவன் இந்தூர் - பாட்னா விரைவு ரயிலையும் அஜ்மீர்- சீல்டா விரைவு ரயிலையும் கவிழ்க்கச் சதி செய்ததை ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரி வித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!