சென்னை: தண்ணீர் என்று தவறாக நினைத்து அமிலம் குடித்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான ஓமீர், கொத்தவாசல் சாவடியில் தங்கியிருந்து அதே பகுதியில் ஒரு கிடங்கில் மூட்டை தூக்கும் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தண்ணீர் தாகம் ஏற்படவே கிடங்கில் காணப்பட்ட குவளையில் இருந்த அமிலத்தைத் தண்ணீர் எனக் கருதி அவர் குடித்துள்ளார். இதில் வாய், தொண்டை, குடல் பகுதிகள் வெந்து போனதில் அவர் உயிரிழந்தார்.
தண்ணீர் எனக் கருதி அமிலத்தைக் குடித்த இளையர் பரிதாப பலி
1 mins read

