அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளிக்க வரும் அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு காணப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் போராட்டக்காரர் களைச் சந்திக்க முயற்சி செய்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திருப்பி அனுப்பப்பட்டார். இதே போல திருச்சியில் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்திக்க வந்த திமுக மூத்த தலைவர் கே.என்.நேருவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அலங்காநல்லூரில் போராட்டக்காரர்களைச் சந்திக்க வந்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் திருப்பி அனுப்பப்பட்டார். கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த திமுகவின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பியுமான சுகவனம் தண்ணீர் பொட்டலம் வீசி விரட்டி அடிக்கப்பட்டார். மதுரையில் தமுக்கம் மைதானத்தில் போராட்டக்காரர்களைச் சந்திக்க வந்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் திருப்பி அனுப்பப்பட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!