தூய தமிழில் பேசும் தேநீர்க் கடைக்காரர்

தூய தமிழில் பேசும் தேநீர்க் கடைக்காரர்

1 mins read
d36f11dc-483c-4788-abe8-d7f1f717392d
-

உளுந்தூர்பேட்டை ஆலடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், தேநீர்க் கடை நடத்தி வருகிறார். 4ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த தனது வாடிக்கையாளர்களிடம் தூய தமிழில் மட்டுமே உரையாடுகிறார். மேலும் ஒவ்வொருவரும் வீட்டில் குழந்தைகளிடம் நல்ல தமிழில் பேச வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார். இவரது தமிழ்ச் சேவையை பலரும் வெகுவாகப் பாராட்டுகின்றனர். படம்: ஊடகம்