தமிழகம் முடங்கியது

சென்னை: சென்னை மெரினா கடற்கரை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்களும் இளையர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதால் தமிழகம் நிலை குத்தியது. மாணவர், இளையர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துவருகிறது. "ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயமாட்டோம்," என்று சொல்லும் அவர்கள் இரவு, பகலாக வெயி லிலும் பனியிலும் இருந்த இடத்தைவிட்டு அகலாமல் தொடர்ந்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்குத் தனிப்பட்டவர் களும் நல விரும்பிகளும் சில தொண்டூழிய நிறுவனங்களும் தண்ணீர், உணவுகளை விநி யோகிக்கின்றன. இந்த நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சில மாணவர் குழுக்களும் கலை நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றன. இதற்கிடையே இவர்களுக்கு ஆதரவாக நேற்றுக் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் சில்லறைக் கடைகள், ஹோட்டல்கள் நேற்று மூடப் பட்டன. இது குறித்துப் பேசிய தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள் ளையன், "ஜல்லிக்கட்டுக்குப் போராடும் மாணவர்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித் துள்ளோம். வணிகர்கள் மாவட்டந் தோறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடு வார்கள்," என்று கூறினார்.

சென்னை மெரினா கடற்கரையில் இளையர்களின் போராட்டம் இரவு பகலாக நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்தப் போராட்டத்துக்குத் தமிழகம் முழுவதும் ஆதரவு வலுத்துவருகிறது. 'ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓய மாட்டோம்', 'பீட்டாவைத் தடை செய்', 'ஜல்லிக்கட்டு எங்களுக்கு வேண்டும்', 'ஜல்லிக்கட்டு எங்கள் அடையாளம்' என்று அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!