சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிக்கு ஆசைப்பட்டு, தமிழன் என்ற உணர்வை இழந்து விட்டதாக ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினர் சாடியுள்ளனர். நேற்று முன்தினம் மெரினாவில் நடந்த போராட்டத்தில் பேசிய மாணவர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து தமிழக எம்பிக்களும் ஒட்டுமொத்தமாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். "தமிழனின் அடையாளம், உரிமை, பாரம்பரியம் ஆகியவற்றுக்கு எதிராக நடக்கும் சதி தொடர்பாக மத்திய அரசு மௌனம் சாதிக்கிறது. தமிழரின் உணர்வுகளை, டெல்லியில் வெளிப்படுத்த வேண்டிய கடமை, தமிழக எம்பிக்களுக்கு உள்ளது," என மாணவர்கள் குறிப்பிட்டனர்.
எம்பிக்கள் பதவி விலக வேண்டும்
1 mins read

