தோக்கியோ: ஜப்பான் தலை நகரான டோக்கியோவில் வசிக்கும் தமிழர்களும் தங்கள் பங்கிற்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடைசெய்யக் கோரியும் கையெழுத்து வேட்டை நடத்தினர். "தமிழர்களின் பழம்பெருமை மிக்க, கலாசாரம் சார்ந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும் அந்நிய நாட்டு சக்திகளுக்கு இடமளிக்க மாட் டோம். எங்களது பாரம்பரியத்தைப் பாதுகாக்க இறுதிமூச்சு உள்ள வரை போராடுவோம்," என பங்கு சாய் நகரில் 300 பேர் பங்கேற்ற போராட்டத்துக்குத் தலைமை தாங் கிய அமைப்பாளர் தெரிவித்தார். மலேசிய தலைநகர் கோலாலம் பூரிலும் நேற்று முன்தினம் மாலை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட் டோர் பங்கேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர்.
ஜப்பான் வரை பரவிய எழுச்சி
1 mins read

