மதுரை: மதுரை உட்பட 13 மாவட்டங்களில் பரவலாகக் காணப்படும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட தலைநகரங்க ளில் அடுத்த 10 நாட்க ளுக்குள் சீமைக் கருவேல மரங்களை அகற்ற 13 மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இப்பணியை மாவட்ட முதன்மை நீதிபதிகள் ஆய்வு செய்யவேண்டும் என்றும் பிற பகுதிகளில் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மூலம் சீமைக் கருவேல மரங்களை அகற்ற ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது அற்புதமான உத்தரவு என மதிமுக பொதுச்செயலர் வைகோ வரவேற்றுள்ளார்.
சீமைக் கருவேல மரங்களை அகற்ற கெடு
1 mins read

