வாழைப்பழத்தில் கடத்திய ரூ.45 லட்சம் பணம் பறிமுதல்

வாழைப்பழத்தில் கடத்திய ரூ.45 லட்சம் பணம் பறிமுதல்

1 mins read
b3b9165e-e095-4501-ab50-ee648b1f3280
-

கோழிக்கோடு: துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்த இரு பயணிகள், 6E-88 என்ற இண்டிகோ விமானத்தில் வாழைப்பழத்துக்குள் வைத்து கடத்தி வந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள சவூதி ரியால் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தப் பணத்துக்கான கணக்கு விவரங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில், "இந்தப் பணம் இரு பயணிகளின் பெட்டிகளில் சோதனை செய்யப்பட்டபோது வாழைப்பழ சீப்புகளில் உள்ள பழங்களுக்குள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது," என்று தெரிவித்தனர். படம்: ஏஎன்ஐ டுவிட்டர்