அவனியாபுரம்: இன்று ஜல்லிக்கட்டு திருவிழா

அவனியாபுரம்: இன்று ஜல்லிக்கட்டு திருவிழா

1 mins read
81227ba1-1c89-46f4-83f3-be5dc7b31f0d
-

மதுரை: உலகளவில் பிரசித்தி பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற உள்ளது. இதற் காக ஏறத்தாழ 900 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏராள மான மாடுபிடி வீரர்கள் காளை களை அடக்க மிகுந்த ஆர்வத் துடன் காத்திருக்கிறார்கள். தமிழக அரசின் ஆதரவுடனும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட் டும் ஞாயிற்றுக்கிழமையான இன்று மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக் கட்டு நடக்கிறது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை அவனியாபுரம் பகுதி மக்கள் முழுவீச்சில் சிறப் பாகச் செய்துள்ளனர். அவனியா புரம்- திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள குருநாதன் கோவில் முன் புள்ள திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1ஆம் தேதி முதற் கொண்டே பார்வையாளர்களுக் கான இருக்கைகள் அமைப்பது, சவுக்குக் கம்புகள் மூலம் தடுப்பு கள் அமைப்பது உள்ளிட்ட பணி கள் துரித கதியில் நடைபெற்றன.

பெயர்களைப் பதிவு செய்ய காத்திருக்கும் வீரர்கள் படம்: ஊடகம்