ராம்பூர்: பிரதமர் மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு உத்தரப்பிரதேச சர்ச்சை கருத்துகளுக்குப் பெயர்போன மூத்த அமைச்சர் ஆசாம் கான் பேசியுள்ளார். தனது சொந்த தொகுதியான ராம்பூரில் நடந்த சமாஜ்வாடி கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக 130 கோடி மக்களை ஆளும் அரசன் ராவணனின் உருவ பொம்மையைக் கொளுத்துவதற்காக லக்னோவுக்குச் செல்கிறார். ஆனால் உண்மையான ராவணன் லக்னோவில் இல்லை. டெல்லியில் இருக்கிறார் என்பதை அவர் மறந்துவிட்டார் என்று ஆசாம் கான் விமர்சித்துள்ளார்.
ராவணனுடன் பிரதமர் மோடியை ஒப்பிட்ட உ.பி. அமைச்சர்
1 mins read

