சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவைச் சந்திக்கவிடாமல் சசிகலா தடுத்தார் என அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னையன் குற்றம்சாட்டி உள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா யாரையும் தமது அரசியல் வாரிசாக அறிவிக்க வில்லை என்றும் அவர் செய்தி யாளர்களிடம் கூறினார். நேற்று முன்தினம் வரை சசிகலா ஆதரவாளராக இருந்த பொன்னையன், திடீரென முதல் வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து, அவரை ஆதரிப்பதாகத் தெரிவித்தார். பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய அவர் காலஞ் சென்ற எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் பன்னீர்செல்வம் செயல்படுவார் என்றார்.
பொன்னையன்: ஜெயா தன் வாரிசை அறிவிக்கவே இல்லை
1 mins read
-

