புதுடெல்லி: நான்கு வயது சிறுவன் மீது டாக்சியை மோதி ஏற்றிய ஓட்டுநர், அந்தச் சிறு வனையும் அவனது தாயையும் தனது டாக்சியிலேயே வைத்துக் கொண்டு டெல்லியை சுமார் 5 மணி நேரத்திற்குச் சுற்றியிருக் கிறார். விபத்துக்குள்ளான சிறுவ னுக்கு உடனே சிகிச்சையளிக் காத தால் அந்தச் சிறுவன் பரி தாபமாக மாண்டான். இதுதொடர் பாக அந்த டாக்சி ஓட்டுநரை போலி சார் கைது செய்துள்ளனர். 32 வயது டாக்சி ஓட்டுநர் ராகுல், விபத்தில் அடிபட்ட சிறு வனையும் அச்சிறுவனின் தாய் வசந்தி குமாரியையும் தனது டாக்சியில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறியிறங்கி யிருக்கிறார். இவர் சென்ற அனைத்து மருத்துவமனை களுமே சிறுவனுக்குச் சிகிச்சை யளிக்க மறுத்துவிட்டன.
போலிசில் தெரிவிக்காததால் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் மறுப்பு
1 mins read

