காரை பின்தொடர்ந்து ஓடிவந்த சசிகலா ஆதரவாளர்கள்

காரை பின்தொடர்ந்து ஓடிவந்த சசிகலா ஆதரவாளர்கள்

1 mins read
2726f647-6aa9-4e4f-af26-0cf1a28aad5e
-

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைவதற்காக நேற்று மதியம் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார் அதிமுக பொதுச் செயலர் சசிகலா. அவரை அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் கண்ணீர் மல்க வழியனுப்பினர். அப்போது சில தொண்டர்கள் அவரது காரின் இருபுறமும் முன் பக்கமும் ஓடியபடியே அவரை வாழ்த்தி முழக்கமிட்டனர். எனினும் சிறிது தூரம் சென்றதும் தன்னைப் பின்தொடர வேண்டாம் என சசிகலா அவர்களிடம் அறிவுறுத்தினார். பின்னர் தொண்டர்கள் வழிவிட அவரது கார் பெங்களூரு நோக்கி வேகமாகப் புறப்பட்டுச் சென்றது. படம்: சதீஷ்